திருமலை: ஆந்திராவில் ‘‘மன்மத ராசா மன்மத ராசா’’ உள்ளிட்ட சினிமா பாடல்களுக்கு நடனமாடி விநாயகர் சிலையை போலீசார் கரைத்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் பாதுகாப்பிற்காக ஆந்திர மாநில அரசின் ஆக்டோபஸ் கமாண்டோ படை வீரர்கள் பணிபுரிந்து வருகின்றனர். திருமலையில் உள்ள பாஞ்சஜன்யம் பக்தர்கள் ஓய்வறையில் ஆக்டோபஸ் கமாண்டோ படை வீரர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி, இந்த ஓய்வறையில் விநாயகர் சிலை வைத்து பூஜைகள் செய்யப்பட்டது. 3வது நாளான நேற்று விநாயகர் சிலையை போலீசார் ஜீப்பில் வைத்து ஊர்வலமாக பாபநாசம் செல்லும் சாலையில் உள்ள கோகர்ப்பம் அணைக்கு கொண்டு வந்தனர்.