குஜராத் மாநிலத்தின் 17-வது முதல்வராகிறார் பூபேந்திர படேல்: பாஜக எம்.எல்.க்கள் கூட்டத்தில் தேர்வு

காந்திநகர்: குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேலை பாஜக எம்.எல்.க்கள் தேர்வு செய்துள்ளனர். குஜாத்தின் காந்திகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக பூபேந்திர படேலை எம்.எல்.ஏ.க்கள் தேர்தெடுத்தனர். பாஜகவை சேர்ந்த விஜய் ரூபானி கடந்த 2016-ம் ஆண்டு முதல் முதல்வராக இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று திடீரென ஆளுநரை சந்தித்து விஜய் ரூபானி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குஜராத்தின் வளர்ச்சி பணிபுரிய ஆற்றலுடனும், உற்சாகத்துடனும் புதிய தலைமையின் கீழ் நோக்கி செல்ல வேண்டும். இதனை மனதில் வைத்து தான் பதவி விலகினேன் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, குஜராத்தில் இன்று மதியம் 3 மணி அளவில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், பிரகலாத் ஜோஷி ஆகியோர் பார்வையாளர்களாக பங்கேற்றனர்.

இந்நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான நரேந்திர சிங் தோமர் கூறினார். குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் நாளை பதவியேற்கிறார் ஜனதா கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்லோடியா தொகுதி பாஜக எம்எல்ஏவாக பூபேந்திர படேல் உள்ளார்.  குஜராத்தின் 17-வது முதல்வராக பூபேந்திர படேல் பதவி ஏற்க உள்ளார்.

Related Stories: