மீண்டும் அறிமுகமான முதல் போட்டியிலேயே கிறிஸ்டியானோ ரொனால்டோ அபாரம்: 2 கோல் அடித்து அசத்தினார்..!

உலகின் தலைசிறந்த  கால்பந்து வீரர்களில் போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோவும் ஒருவர். இவர் கடந்த 2003-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடினார். பின்னர் ரியல் மாட்ரிட் அணிக்கு மாறினார். அந்த அணிக்காக சுமார் 9 ஆண்டுகள் விளையாடினார். அதன்பின் யுவான்டஸ் அணியில் இணைந்து ஆடினார்.

இந்நிலையில் மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு திரும்பியுள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ நேற்று நியூகேஸ்டில் அணிக்கெதிராக முதன்முறையாக களம் இறங்கினார். முதல் போட்டியிலேயே தனது சிறப்பான ஆட்டத்தால் இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார். இதன் காரணமாக மான்செஸ்டர் யுனைடெட் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதில் ரொனால்டோ 62 நிமிடங்களில் 2 கோல்கள் அடித்தார். இதன்மூலம் தான் இன்னும் திறமையான வீரர்தான் என நிரூபித்துள்ளார்.

Related Stories: