பரமக்குடி: தியாகி இமானுவேல் சேகரன் 64வது ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர்கள், பல்வேறு கட்சியினர், அமைப்பினர் நேற்று அஞ்சலி செலுத்தினர். அவரது சொந்த ஊரான செல்லூர் கிராம மக்கள் ஊர்வலமாக சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இமானுவேல் சேகரன் குடும்பத்தினரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில், அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், கயல்விழி செல்வராஜ், எம்பிக்கள் நவாஸ்கனி, தனுஷ் குமார், எம்எல்ஏக்கள் முருகேசன், வெங்கடேசன், ராஜா, தமிழரசி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.