தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை, திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இங்கு போடப்பட்ட பாடலுக்கு மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் நடனம் ஆடினர். அப்போது இரு தரப்பினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில், ஒரு தரப்பினர் மறைத்து வைத்திருந்த கத்தியால் எதிர் தரப்பை குத்தியதில் வண்ணாரப்பேட்டை சஞ்ஜீவிராயன் தெருவை சேர்ந்த கல்லூரி மாணவன் தினேஷ் (20), கொருக்குப்பேட்டை திருநாவுக்கரசு தோட்டம் 2வது தெருவை சேர்ந்த யுவராஜ் (22) ஆகிய இருவர் படுகாயமடைந்தனர். இதனால், திருமண மண்டபத்தில் பதற்றம் நிலவியது.