கொடைக்கானல்: கொடைக்கானலில் பேரிஜம் வனப்பகுதியை உடனே திறந்துவிட வேண்டும் என சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது. இதையடுத்து மூடப்பட்டிருந்த சுற்றுலாத்தலங்கள் அனைத்தையும் திறக்கப்பட்டன. பயணிகளும் திறக்கப்பட்ட சுற்றுலா இடங்களை கண்டு ரசித்து வருகின்றனர். இந்நிலையில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் சுற்றுலா பகுதி பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது.