மதுரை: தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பாஜ பிரமுகர்கள் கணேசன், சுவாமிநாதன் ஆகிய இருவரும் ‘‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’’ என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இவ்வழக்கில் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் கைதான அகிலாண்டம் மற்றும் நிதி நிறுவன அலுவலக பணியாளர் வெங்கடேசன் ஆகியோர் ஐகோர்ட் கிளையில் ஜாமீன் கோரி மனு செய்தனர். இம்மனு நீதிபதி புகழேந்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.