டேராடூன்: உத்தரகாண்ட் மாநில ஆளுநர் பேபி ராணி மவுர்யா. 65 வயதான இவர், கடந்த 2018, ஆகஸ்ட் 26ம் தேதி இம்மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். மூன்று ஆண்டு பதவிக் காலம் மட்டுமே முடிந்த நிலையில், நேற்று இவர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். ஜனாதிபதிக்கு இவர் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில். சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.