திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் 2வது ஆண்டாக பக்தர்கள் இன்றி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் வருடாந்திர பிரமோற்சவம் மிக சிறப்பானதாகும். இந்த உற்சவத்தை காண ஒரு லட்சம் முதல் 3 லட்சம் பக்தர்கள் வரை திரண்டு வந்து 4 மாட வீதிகளில் வீதி உலா வரும் உற்சவ மூர்த்திகளை தரிசனம் செய்வார்கள். கடந்தாண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோயிலில் பக்தர்கள் இன்றி பிரமோற்சவம் நடத்தப்பட்டது. கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வராததால் பொதுமக்கள் அதிகம் கூடும் உற்சவங்களை நடத்த வேண்டாம் என ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது.