திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மேற்கு ரத வீதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தின் முதல் மாடியில், பொதுத்துறை வங்கியின் கிளை இயங்கி வருகிறது. ஊழியர்கள் வழக்கம் போல், சனிக்கிழமை மாலை 7 மணிக்கு வங்கியை பூட்டி விட்டு சென்றனர். நள்ளிரவில் கொள்ளையர்கள், வங்கியின் முன்புறம் இருந்த மின்விளக்கு மற்றும் சிசிடிவி கேமராவை உடைத்து விட்டு, வடக்கு புறம் உள்ள ஜன்னலின் கம்பிகளை இயந்திரம் மூலம் அறுத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர், நகை, பணம் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சென்றுள்ளனர்.