விபத்தில் வாலிபர் பலி

திருத்தணி: திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு கீழ் காலனியை சேர்ந்தவர் சக்திவேல்(27). இவரது மனைவி அம்மு(25). 6 மாத கர்ப்பிணி. சக்திவேல் மற்றும் அவருடைய உறவினர்கள் எஸ்.ஆர்.கிராமத்தை சேர்ந்த பெருமாள்(42), விநாயகம்(30) ஆகியோருடன் நேற்று திருத்தணி நகரத்திற்கு வந்து பொருட்களை வாங்கிக்கொண்டு இரண்டு சக்கர வாகனத்தில் மீண்டும் கிராமத்திற்கு சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது. இதில் டிராக்டரின் டயர் ஏறி சம்பவ இடத்திலேயே சக்திவேல் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Related Stories: