சிகிச்சை அளிக்காததை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு வயதான தம்பதியர் தர்ணா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நேதாஜிநகர் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன் ( 62). இவரது மனைவி மன்னம்மாள் ( 58). இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். கடந்த 10 நாட்களாக காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த மன்னம்மாள் தனியார் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். காய்ச்சல் குணமாகாததால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், அவருக்கு கொரோனா தொற்று ஊறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 1ம்தேதி செங்கல்பட்டு அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த நான்கு நாட்களாக, இவருக்கு மருத்துவர்களும், செவிலியர்களும் சரியான சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக பதிலளித்து வந்தனர்.

இதனால், கடுமையான மன உளச்சலுக்கு ஆளான இவர்கள், ‘‘எங்களது உயிருக்கு  உத்திரவாதம் இல்லை. எங்களை போன்ற ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்காமல் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிப்பதில்லை என குற்றம்சாட்டி,  கொரோனா நோயாளி மன்னம்மாள் அவரது கணவர் வெங்கடேசன் ஆகிய இருவரும் நியாயம் கேட்டு செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த செங்கல்பட்டு நகர போலீசார் அவர்களிடம் சமரசம் பேசி சிறப்பு சிகிச்சை அளிப்பதாக உத்திரவாதம் அளித்தனர். இதை தொடர்ந்து அவர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர்.பின்னர் அவர்கள்  எஸ்ஆர்எம் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவத்தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: