மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர் பவுன்ராஜ். எம்.எல்ஏவாக இருந்த இவர், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 2வது தடவையாக போட்டியிட்டார். அப்போது பவுன்ராஜ் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக எடக்குடி அதிமுக ஊராட்சி தலைவர் தங்கமணி (56) கடந்த ஏப்ரல் 5ம்தேதி பெரம்பூர் போலீசில் புகார் அளித்தார். அதில், பவுன்ராஜ் வெற்றிக்காக ரூ.5.48 லட்சத்தை ஆதரவாளர்கள் மூலம் கொடுத்து வாக்காளர்களுக்கு கொடுக்க சொன்னார். அதற்கு நான் மறுத்ததால் பவுன்ராஜ், போனில் குடும்பத்தை நிம்மதியாக வாழவிட மாட்டேன் என மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த மிரட்டல் குறித்த சிடி ஒன்றும் இணைக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக பெரம்பூர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.