கொடநாடு வழக்கு வரும் 7ல் விசாரணை: உச்ச நீதிமன்றம் தகவல்

புதுடெல்லி: கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் மேல்விசாரணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வரும் 7ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை தொடர்பான விவகாரத்தில் கூடுதல் விசாரணை நடத்தக்கூடாது என வழக்கில் சாட்சியாக இருக்கும் அனுபவ் ரவி என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், கொடநாடு விவகாரத்தில் கூடுதல் விசாரணை நடத்தக் கூடாது என்றும், சாட்சிதாரரான அனுபவ் ரவி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 30ம் தேதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு, வரும் 7ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Related Stories: