ஆம்பூர்: ஆம்பூர் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட ஒலை குடிசையை தாசில்தார் நேற்று அகற்றினார். ஆம்பூர் தாலுகா வெங்கிளி கிராமத்தில் வேளாண் விரிவாக்க மைய கட்டிடம் கட்ட அரசு நிலம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த இடத்தை ஆக்கிரமித்து நேற்று அதே பகுதியை சேர்ந்த சந்திரகுமார் என்பவர் ஒலை குடிசை அமைத்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி விஏஓ ரஞ்சித் உடனடியாக ஆம்பூர் தாசில்தார் அனந்த கிருஷ்ணனுக்கு புகார் தெரிவித்தார்.