டெல்லி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மேலும் அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. செப்.15-க்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அவகாசத்தை நீட்டிக்க கோரி புதிய இடைக்கால மனுவை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே இரு முறை அவகாசம் கோரியிருந்த நிலையில் தற்போது 3வது முறையாக கூடுதல் கால அவகாசம் கோரி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.