நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்து இருக்கும் முதுமலை புலிகள் காப்பகம் 4 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்ட புலிகள் காப்பகம், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இன்று முதல் திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளின் கைகளில் கிருமிநாசினி தெளித்து உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகே வனவிலங்குகளை பார்க்க வாகனங்களில் அழைத்து செல்லப்பட்டனர்.