திருவாரூர் : திருவாரூர் கடைவீதியில் நகைக்கடைக்குள் புகுந்து கடை உரிமையாளர் கண்களில் மிளகாய் பொடி தூவி நகைகளை கொள்ளையடித்த கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.திருவாரூர் பள்ளிவாசல் தெருவில் கிரண்குமார்(42) என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இந்த கடைக்கு நகை வாங்குவதுபோல் பர்தா அணிந்து 35 வயது பெண் ஒருவர் வந்தார். பின்னர் அவர், ஒரு பவுன் அளவில் செயின் வேண்டுமென கிரண்குமாரிடம் கேட்டார். இதனால் ஒரு பவுன் செயின்களை எடுத்து கிரண்குமார் காண்பித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கடைக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், கிரண்குமார் கண்களில் மிளகாய் பொடியை தூவினார். பின்னர் ஒரு பவுன் எடையுடைய 5 செயின்களை எடுத்துக்கொண்டு மர்ம நபர் தப்பியோடினார்.