துபாய்: ‘அல்சிமர்’ எனும் ஞாபக மறதி நோய் பெரும்பாலும் 60 வயதை தாண்டியவர்களை பாதிக்கும் என மருத்துவ உலகின் பரவலான கருத்து. இந்நோயால் பாதித்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நினைவுகளை இழந்து, நாளடைவில் தான் யார் என்பதை மறக்கும் கொடுமையும் ஏற்படும். பெரும்பாலும் மரபியல் ரீதியாகத்தான் இந்நோய் வருவதாக கூறப்படுகிறது. சர்வதேச அளவில் 60 வயதை கடந்த 100 பேரில் 5 பேரும், 75 வயதை கடந்தவர்களில் 4ல் ஒருவரும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் மட்டும் 39 லட்சத்திற்கும் அதிகமானோரும், உலகளவில் 4 கோடி பேருக்கும் அதிகமானோரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.