ஐடா புயல் தாக்குதல் நியூயார்க்கில் 8 பேர் பலி

நியூயார்க்: அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை மூன்று நாட்களுக்கு முன் ஐடா என்ற புயல் பயங்கரமாக தாக்கியது. இது, கரை கடந்த போது 250 கிமீ வேகத்தில் காற்று வீசியது. இதனால், வீடுகள் காற்றில் பறந்தன. நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். புயல் காரணமாக நியூரார்க்கில் கனமழையும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மேலும், சுரங்கப் பாதை ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, முதல் முறையாக நேற்று முன்தினம் இரவு அங்கு வெள்ள அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர் மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை நியூயார்க் நகரில் 8 பேர் உயிர் இழந்துள்ளனர்.

Related Stories: