சென்னை: பொதுத்துறை நிறுவன சொத்துக்களை ஒன்றிய அரசு விற்கக்கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பொதுத்துறை நிறுவனங்கள் அனைவருடைய சொத்தாகும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். பொதுச்சொத்துக்களை தனியார்மயமாக்குவது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பொதுச்சொத்துக்களை விற்பதோ, குத்தகைக்கு விடுவதோ தேச நலனுக்கு உகந்தது அல்ல. பொதுச்சொத்துக்களை விற்கக்கூடாது என வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.