கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் பதவியேற்பு

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் இயங்கும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனராக பா.வெங்கட்ராமன் பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனராக பணிபுரிந்து வந்த அருண்குமார் பாதூரி, பணி ஓய்வு பெற்ற நிலையில், புதிய இயக்குனராக  வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார். இவருக்கு, அணுசக்தி துறையில் பல்வேறு பதவிகளை வகித்த அனுபவம் உள்ளது. புதிதாக பொறுப்பேற்ற இயக்குனருக்கு அணுமின் நிலையத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள், அதிகாரிகள் வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: