ஆலந்தூர்: மூவரசம்பட்டு, சபாபதி நகர், 2வது தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (29). இவர் மீது பழவந்தாங்கல், பல்லாவரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, அடிதடி, கஞ்சா விற்பனை போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. பழவந்தாங்கல் காவல் நிலைய வழக்கு சம்மந்தமாக, ஆலந்தூர் கோர்ட்டில் நேற்று ஆஜராகிவிட்டு, வீடு திரும்பிய ராமச்சந்திரன், தாய் சுந்தரியிடம் பேசிக் கொண்டிருந்ததார். அப்போது, வீட்டில் புகுந்த 5 பேர், ராமச்சந்திரனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில் தலை சிதறி சம்பவ இடத்திலேயே ராமச்சந்திரன் இறந்தார்.