திருமங்கலம் : கள்ளிக்குடியிலிருந்து விருதுநகர் மாவட்டம் காரியாபட்டிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் எஸ்.சென்னம்பட்டி அருகே கவுண்டமாநதியின் மேல் மேம்பாலம் அமைந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட இந்த மேம்பாலம் தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. திருமங்கலம் மருதங்குடி, பெரியார் நிலையம் குராயூர், டி.கல்லுப்பட்டி காரியாபட்டி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு டவுன் பஸ்கள் மற்றும் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் நூற்றுக்கணக்கதில் இப்பாலத்தின் வழியாக சென்று வருகின்றனர்.