காபூல்: ஆப்கானிஸ்தானில் இசைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டுப்புற பாடகர் ஒருவரை தலிபான்கள் அவரது வீடு புகுந்து சுட்டுக் கொன்றனர். தலிபான்களால் கைப்பற்றப்பட்ட ஆப்கானிஸ்தானின் கிஷ்னாபாத் பள்ளத்தாக்கில் வசித்து வந்தவர் பிரபலமான நாட்டுப்புற பாடகர் ஃபவாத் அந்தராபி. இவர் ேநற்று தனது வீட்டில் இருந்த போது, அங்கு வந்த தலிபான்கள் அவரை வீட்டிற்குள் இருந்து வெளியே இழுத்து போட்டு சுட்டுக் கொன்றனர். இதனை அவரது மகன் உறுதி செய்தார். இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன், தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் இசைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.