வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலையில் தண்டனை கைதி நளினிக்கு, வேலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை இன்று காலை நடந்தது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், அவரது மனைவி நளினி ஆகியோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, தனக்கு உடல் நலன் குன்றியதால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சிறை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார்.