ஆவடி: ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், சரஸ்வதி நகர், எம்ஜிஆர் 9வது தெருவை சேர்ந்தவர் நித்தியானந்தம் (48) .இவர் கட்டிட தொழிலாளி. கடந்த ஒரு வருடமாக நித்தியானந்தம் டி.பி. நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருந்த போதிலும் அவருக்கு நோய் குணமாகவில்லை. இதனால், அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நித்தியானந்தம் வீட்டு படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த மனைவி, மகன் உள்ளிட்ட உறவினர்கள் கதறி அழுதனர்.