முசிறி அருகே வேன் கவிழ்ந்து 15 தொழிலாளர்கள் காயம்

முசிறி: முசிறி அருகே நூற்பாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து 15 பேர் காயமடைந்துள்ளனர். காட்டுப்புத்தூர் அருகே நத்தமேடு என்ற இடத்தில் உள்ள வளைவில் திரும்பிய வேன் வாழை தோப்பில் கவிழ்ந்தது. வேன் ஓட்டுநர் தப்பியோடிய நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: