ஒரே நேரத்தில் தேர்தல்: பாமக வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் மயிலம் தொகுதி உறுப்பினர் சிவகுமார்(பாமக) பேசுகையில், ‘மயிலத்தை புதிய தாலுகாவாக அறிவிக்க வேண்டும். மயிலம் தொகுதியில் கல்லூரி எதுவும் இல்லை. மேற்படிப்புக்காக 30 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வரை மாணவர்கள் செல்கிறார்கள். எனவே, கலை கல்லூரியோ அல்லது தொழில் நுட்ப கல்லூரியோ அங்கு தொடங்க வேண்டும். மேலும், தொகுதியின் மையப் பகுதியில் தீயணைப்பு நிலையம் வேண்டும். 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. தேர்தலை தனியாக நடத்துவதால் கூடுதல் செலவு ஏற்படுகிறது. எனவே, வருங்காலங்களில் ஒரே நேரத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்’ என்றார்.

Related Stories: