புதுடெல்லி: ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தேர்தல் உரிமை குழு (ஏடிஆர்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு ஆகியவை 542 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 1,953 எம்எல்ஏக்களின் பிரமாண பத்திரங்களை 2019 முதல் 2021 வரை ஆய்வு செய்துள்ளன. மொத்தம் 2,495 எம்.பி.க்கள்/எம்.எல்.ஏ.க்களில் 363 பேர் (15 சதவீதம்) மீது குற்றவியல் புகார்கள் அளிக்கப்பட்டு, நீதிமன்றங்களில் வழக்கை சந்தித்து வருகின்றனர். இதில் 296 எம்எல்ஏக்களும், 67 எம்.பி.க்களும் உள்ளனர். அதிகபட்சமாக பாஜவை சேர்ந்த 83 எம்.பி.க்கள்/எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் 47, திரிணாமுல் காங்கிரஸ் 25 பேரும் அடங்குவர். 24 சிட்டிங் மக்களவை உறுப்பினர்கள் மீது மொத்தம் 43 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 111 சிட்டிங் எம்எல்ஏக்கள் மீது மொத்தம் 315 கிரிமினல் வழக்குகள் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் நிலுவையில் உள்ளன.