நெமிலி: நெமிலி அடுத்த கீழ்வெங்கடாபுரம் கிராமத்தில் ஊராட்சி அலுவலக கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட தெருக்கள் அமைந்துள்ளது. இப்பகுதியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள ஊராட்சி அலுவலகம் பழுதடைந்து உள்ளது என்றும், புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் பேரில் கடந்த அதிமுக ஆட்சியில் ₹20 லட்சம் நிதி ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஒதுக்கப்பட்டது. இதில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய அரக்கோணம் தொகுதி எம்எல்ஏ சு.ரவி புதிய ஊராட்சி அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.