சின்னாளபட்டி: ஆத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட நடுப்பட்டி, அம்பாத்துரை, கதிரிப்பட்டி, குரும்பபட்டி, கலிக்கம்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, செட்டியபட்டி, ஆதிலெட்சுமிபுரம், வக்கம்பட்டி, பஞ்சம்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 20 வருடங்களுக்கு மேலாக சின்ன வெங்காயம் மகசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.