சின்னாளபட்டி அருகே அறுவடைக்கு தயாரான சின்ன வெங்காயம்

சின்னாளபட்டி: ஆத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட நடுப்பட்டி, அம்பாத்துரை, கதிரிப்பட்டி, குரும்பபட்டி, கலிக்கம்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, செட்டியபட்டி, ஆதிலெட்சுமிபுரம், வக்கம்பட்டி, பஞ்சம்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 20 வருடங்களுக்கு மேலாக சின்ன வெங்காயம் மகசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுவாக இப்பகுதி விவசாயிகள், தோட்டத்தின் ஒருபகுதியில் தீவிரமாக வெங்காய அறுவடை செய்யும்போது, மறுபுறத்தில் வெங்காயத்தை நடவு செய்வார்கள். இந்நிலையில் தற்போது இப்பகுதியில் உள்ள நிலங்களில் நடவு செய்யப்பட்டுள்ள சின்ன வெங்காய செடிகள் நன்கு வளர்ந்து, அறுவடைக்கு தயாராக உள்ளது. அவற்றை அறுவடை செய்து, சந்தைக்கு அனுப்பும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: