அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும் அமைச்சராக இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியில் இருந்து விலகிய சித்து, அமரீந்தருக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டார். அடுத்தாண்டு இம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இவர்களின் மோதலால் கட்சியின் வெற்றிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று சோனியா காந்தி நினைத்தார். இதனால், அமரீந்தரின் கடும் எதிர்ப்பையும் மீறி பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்துவை நியமித்தார். இதனால், இவர்களின் மோதல் முடிவுக்கு வந்துள்ளது.