புதுடெல்லி: டெல்லியில் கடந்த 1ம் தேதி 9 வயது சிறுமியை கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்து ெகான்றது. இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அவர்களின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர், அவர்களின் குடும்பத்தினரின் புகைப்படங்களை வெளியிடுவது சட்டப்படி குற்றம். இதனால், அவரது கணக்கை டிவிட்டர் நிர்வாகம் முடக்கியது. பின்னர், மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டது.