அதிமுக பிரமுகர் வெற்றிவேல் தந்தை துலுக்காணம் வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு.: முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

சென்னை: அதிமுக பிரமுகர் வெற்றிவேல் தந்தை துலுக்காணம் வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றுள்ளது. சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள அதிமுக பிரமுகர் வெற்றிவேல் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று மாலை 5 மணி அளவில் சோதனை செய்ய துவங்கினர். இந்த சோதனை இன்று கலை 6.30 மணியளவில் நிறைவு பெற்றது.

அந்த சோதனையில் முக்கிய ஆவணங்களும், ரூ.11.8 லட்சம் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இன்று காலை சென்னையில் உள்ள அதிமுக பிரமுகர் வெற்றிவேல் தந்தை துலுக்காணம் சூளைப்பள்ளம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்த தொடங்கியது.

அந்த சோதனை 7 மணி நேரம் நீடித்து தற்போது முடிந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பிரமுகர் வெற்றிவேல் தந்தை துலுக்காணம் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ஒரு மடிக்கணினி, முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: