மாஸ்கோ: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்திருக்கும் நிலையில் அவர்களுடன் இன்று பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும் என்று ரஷ்யா அறிவித்திருக்கிறது. அதேநேரத்தில் தாலிபான்களுடன் நட்பை விரும்புவதாக சீனா அறிவித்துள்ளது. அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில், ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்திருக்கிறார்கள். இந்நிலையில் காபூலில் உள்ள ரஷ்ய தூதுவர், தாலிபான்களுடன் இன்று பேச்சுவார்த்தை மேற்கொள்வர் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.