கோலாலம்பூர்: நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இழந்ததால் மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் ராஜினாமா செய்துள்ளார். மலேசியாவில் பிரதமராக இருந்த மகதீர் முகமது(96) கடந்த ஆண்டு பதவி விலகினார். கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முகைதீன் யாசின் பிரதமராக பொறுப்பேற்றார். இதனிடையே கொரோனா பரவல் தொற்றை கட்டுப்படுத்துவதில் அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். மோசமான நிர்வாகம், தோல்வியை ஒப்புக்கொள்வதற்கு விருப்பமின்மை உள்ளிட்ட காரணங்களால் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன.