உடுமலை: கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்தபோது, உடுமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில், கொரோனா சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டது. தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.தற்போது, பாதிப்பு குறைந்ததையடுத்து, இங்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை. சிறப்பு வார்டு செயல்பட்டபோது, இங்கு நோயாளிகளுக்காக பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகள், முகக்கவசங்கள், கையுறைகள், மருத்துவர்கள் பயன்படுத்திய கவச உடை, காலி மருந்து பாட்டில்கள் உள்ளிட்டவை கல்லூரியின் பின்புற காம்பவுண்ட் சுவரையொட்டி கொட்டப்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.