ராமநாதபுரம்: ராமேஸ்வரம் கோயில் 15 நாட்களுக்கு பின்னர் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை ஆகஸ்ட் 1ம் தேதி மூடப்பட்டது. ஆடி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களில் பங்கேற்பதற்கு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. 15 நாட்களுக்கு பிறகு இன்று முதல் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.