கோவை: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அதிமுக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பொள்ளாச்சியில் இளம்பெண்களை கடத்தி பண்ணை வீட்டில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ பதிவு செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சி.பி.ஐ விசாரித்து வரும் இந்த வழக்கில் நேற்று பொள்ளாச்சி கிட்ட சூரம்பாளையம் பகுதியை சேர்ந்த அருண்குமார் (29) என்பவரை சிபிஐ போலீசார் கைது செய்தனர். இவர் ஏற்கனவே கைதாகியுள்ள திருநாவுக்கரசு மற்றும் சதீஷின் நண்பர். சதீஷுக்கு சொந்தமான துணிக்கடையில் இளம்பெண்களை அழைத்து சென்று பேசுவதையும், பின்னர் அவர்களை ஆசை காட்டி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்துவதையும் வாடிக்கையாக வைத்திருந்ததாக தெரிகிறது.