3 மாதங்களுக்கு பின் பூரி கோயில் திறப்பு

புரி: ஓடிசாவில் இருக்கும் பிரசித்தி பெற்ற பூரி ஜெகன்நாதர் கோயில் கொரோனா 2வது அலை எதிரொலியாக கடந்த ஏப்ரம் 24ம் தேதி மூடப்பட்டது.இந்நிலையில், 3 மாதங்களுக்கு பின் இக்கோயில் நேற்று திறக்கப்பட்டது. முதல் கட்டமாக கோயில் சேவகர்களின் குடும்பத்தினர் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். இரண்டாவது கட்டமாக 16ம் தேதி முதல் பூரி நகரில் வசிப்பவர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். வருகிற 23ம் தேதி முதல் பொதுமக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிறு ஊரடங்கு என்பதால் 22, 23ம் தேதி கோயில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: