லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் தொடர் மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக 1243 கிராமங்களை சேர்ந்த 5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 13.1 சதவீதம் மழை பெய்துள்ளது. இது சாதாரணமாக பெய்வதை காட்டிலும் 154 சதவீதம் அதிகமாகும். மழை காரணமாக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரயாக்ராஜ், சித்ரகூட், கவுசாம்பி, லக்னோ, ரேபரேலி , மதேபூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 25 மி.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது.