டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை பிற்பகல் 1 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. நாளை நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நடைபெறும் கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மக்களவை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. பெகாஸஸ் விவகாரம், விவசாயப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பான விவாதங்கள் முடங்கி உள்ளன.