கரகம்பாடி அருகே ₹60 ஆயிரம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்-முதியவர் கைது

திருமலை :  கரகம்பாடி அருகே ₹60 ஆயிரம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் கடத்திய முதியவரை போலீசார் கைது செய்தனர். திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை  எஸ்பி சுந்தர் உத்தரவின்படி, திம்மநாயுடு பாளையம்-  கரகம்பாடி வனச்சரகத்தில்   ஆர்எஸ்ஐ சுரேஷ்பாபு மற்றும் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது, அங்கு செம்மரங்களை வெட்டி கொண்டு வந்த  கடத்தல்காரர்களை போலீசார் சுற்றி வளைக்க முயன்றனர்.

அப்போது, ஒருவர் மட்டும் பிடிப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், ஏர்பேட்டை சேர்ந்த வெங்கடேஷ்(60) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, அவரிடமிருந்து ₹60 ஆயிரம் மதிப்புள்ள 3 செம்மரக்கட்டைகள் மற்றும் கோடாரி, கம்பியை பறிமுதல் செய்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: