திருமலை : கரகம்பாடி அருகே ₹60 ஆயிரம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் கடத்திய முதியவரை போலீசார் கைது செய்தனர். திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை எஸ்பி சுந்தர் உத்தரவின்படி, திம்மநாயுடு பாளையம்- கரகம்பாடி வனச்சரகத்தில் ஆர்எஸ்ஐ சுரேஷ்பாபு மற்றும் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது, அங்கு செம்மரங்களை வெட்டி கொண்டு வந்த கடத்தல்காரர்களை போலீசார் சுற்றி வளைக்க முயன்றனர்.