திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்: ஜெயக்குமார் எம்பி பங்கேற்பு

ஆவடி: திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் அறிமுக  கூட்டம் திருமுல்லைவாயலில் நடந்தது. இதில் ஜெயக்குமார் எம்பி பங்கேற்றார். திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் வருங்கால செயல்திட்ட ஆலோசனை கூட்டம் திருமுல்லைவாயல் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் லயன் டி.ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் விக்டரி மோகன், எஸ்.கபிலன், ஏ.டி.கிருஷ்ணமூர்த்தி, சதா.பாஸ்கரன், பூவை காமராஜ், புழல் குபேந்திரன், விக்டரி ஜெயக்குமார், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஆவடி சர்க்கிள் தலைவர்கள் அ.அமித்பாபு, இ.யுவராஜ், ஜெ.வி.எஸ்.மணிகண்டன் ஆகியோர் வரவேற்றனர்.

புதிய நிர்வாகிகளுக்கு கே.ஜெயக்குமார் எம்.பி பதவிக்கான சான்றிதழ்களை வழங்கினார். இந்த கூட்டத்தில் துரை சந்திரசேகர் எம்எல்ஏ, மாநில துணைத்தலைவர்கள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, கீழானூர் ராஜேந்திரன், திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம், மாநில விவசாய பிரிவு தலைவர் எஸ்.பவன்குமார், மாநில நிர்வாகிகள் சொர்ணாசேதுராமன், இமையாகக்கன், கணபதி அருணாச்சலம், அருள் அன்பரசு, சாந்தகுமார், பொன் ரவி, தரணிபாய் கவுரிகோபால், வட்டார தலைவர்கள் சேகர், வெங்கடேசன் சத்தியமூர்த்தி, ராஜன், ரமேஷ், ஜோஷி பிரேமானந்த், மதுசூதனராவ், சிவசங்கர் வரதராஜன், மணிகண்டன் ஜெயராஜ், கவியரசன் பிரபாகரன், சர்க்கிள் தலைவர்கள் என்.வெங்கடேசன், ஆர்.வெங்கடேசன், சங்கர், சந்திரசேகர், நகர தலைவர்கள் சேதுபதி எம்பெருமான், சுந்தரம், சாந்தாராம், விசுவநாதன் பிரகாஷ் மற்றும் மாவட்ட துணை தலைவர்கள் பொதுச்செயலாளர்கள் செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், துணை அமைப்பு மாவட்ட தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் ஆவடி சர்க்கிள் தலைவர் வக்கீல் சுரேஷ்பாபு நன்றி கூறினார்.

Related Stories: