பாலிவுட் நடிகை ஷூட்டிங்கில் திடீர் மயக்கம்

மும்பை: இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் நுஷ்ரத் பரூச்சா, தமிழில் சந்தானம் நடிப்பில் வெளியான ‘வாலிப ராஜா’ என்ற படத்திலும் நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு மும்பையில் நடந்த இந்திப் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்ற அவர், திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே படக்குழுவினர் அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதுபற்றி நுஷ்ரத் பரூச்சா கூறுகையில், ‘மன அழுத்தம் மற்றும் பதற்றம் காரணமாகவும், தொடர்ந்து 20 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பில் ஈடுபட்டதாலும் என் உடல்நிலை மோசமடைந்தது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் அனைவரையும் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதித்துள்ளது. என் பெற்றோர்களும் மருத்துவமனைக்கு வந்துவிட்டனர். நான் 15 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்’ என்றார்.

Related Stories: