மதுரை: ஆதார் விவரங்களை புலன் விசாரணை அமைப்புகளுக்கு வழங்கலாமே என ஆதார் ஆணையத்திற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. காணாமல் போன புதுக்கோட்டை சிறுவனை கண்டுபிடித்து தரக்கோரும் வழக்கில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும், ஆதார் விவரங்களை தனி நபர்களுக்குத்தான் வழங்க கூடாது எனவும் தெரிவித்துள்ளது.