கோவை: எந்த அரசாங்கமும் தனிமனிதனை உளவு பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெகாசஸ் ஒட்டுக்கேட்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நிலைபாடேதனது கருத்து என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேகதாது விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம்தான் போடுகிறது, இந்தியாவில் அதிக இரட்டை வேடம் ஏற்றவன் நான், அப்படி இரட்டை வேடம் போடுபவர்களை நான் வெகுவாக அறிவேன் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.