திருவள்ளூர்: திருவள்ளூர் அகரம் தெருவை சேர்ந்தவர் கண்ணன்(53). தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலமாக வீடு வாங்குவதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். இதையறிந்த திருவள்ளூர் அடுத்த மணவாள நகர், கண்ணையா நகர், சம்மந்தனார் தெருவை சேர்ந்த பவுல்ராஜ்(54), தன் மனைவி ஞானரோஸ்லினுடன், கண்ணனை சந்தித்து தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் தனது உறவினர்கள் பெரிய பதவில் இருக்கின்றனர். அவர்கள் மூலமாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வீடு வாங்கி தருகிறோம் என்று கூறியுள்ளனர். இதற்காக 2 லட்சத்து 50 ஆயிரம் உடனடியாக கொடுத்தால் வீடு பெற்றுத் தருவதாக கூறியுள்ளனர். இதை உண்மை என்று நம்பிய அவர் 2 லட்சத்து 50 ஆயிரத்தை பவுல்ராஜிடம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த பணத்தை பெற்றுக்கொண்ட பவுல்ராஜ் தன் மனைவியுடன் சேர்ந்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வழங்கியதைப்போல் போலியான குடியிருப்பு அனுமதி சீட்டு மற்றும் மாற்று இடம் வழங்கிட அடையாள சீட்டு ஆகியவற்றை தயார் செய்து உண்மை போல் கண்ணனிடம் கொடுத்துள்ளனர். அதைப் பெற்றுக்கொண்டு விசாரித்தபோது அது போலியான அனுமதி சீட்டு என்பதை அறிந்த கண்ணன் அதிர்ச்சி அடைந்தார்.