ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் எல்லாபுரம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் மற்றும் பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்களின் சங்க தலைவர் ரவி புவனேஸ்வரி தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் ஏ.வி.ராமமூர்த்தி, அபிராமி, ஒன்றிய செயலாளர்கள் ஆ.சத்தியவேலு, தங்கம் முரளி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தேவேந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லோகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.